top of page
38.png

பால், பாலினம், திருநங்கை – சமத்துவம் மற்றும் புரிதல் (Gender and Equality)

பால் (Sex ),     பாலினம் (Gender ),    திருநங்கை(Transgender)- ஆகிய சொற்களைக் கேட்டிருப்போம். இவை பற்றிய தெளிவான அறிவு பெற்றிருக்கிறோமா என்பது கேள்விக்குறியே. ‘பால்’ என்பது பிறப்பால் வருவது. இது உடற்கூறியல் சார்ந்த சொல். ஆண், பெண் என்ற இருபாலினத்தவரின் உடல் அடிப்படையிலான அடையாளத்தைச் சுட்டும் சொல் ‘பால்’ என்பதாகும். இது பொதுவாக ஆண் அல்லது பெண்ணுடன் தொடர்புடைய உயிரியல் பண்புகளை (குரோமோசோம்கள், ஹார்மோன்கள், உடற்கூறியல்) குறிக்கிறது, 

அதே நேரத்தில் பாலினம் என்பது அடையாளம், வெளிப்பாடு மற்றும் பாத்திரங்களுடன் தொடர்புடைய ஒரு சமூக கட்டமைப்பாகும். ஆண், பெண் பாலினங்களுக்கான குணங்களுக்கான வரையறைகள் சமூகவியல் சார்ந்தவை. ஒருவரை ஆணாகவோ, பெண்ணாகவோ சமூக ரீதியாக அடையளப்படுத்தும் செயல் இது. ஆண்மை குணங்கள், பெண்மை குணங்கள் என்பவற்றை உள்ளடக்கியது. இந்த வரையறைகள் இயற்கையானவை அல்ல. மனிதனால் கட்டமைக்கப்பட்டவை. வீரம், தீரம், தைரியம் இவை ஆணுக்கான பண்புகளாகவும் மென்மை, அடக்கம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவை பெண்ணுக்கான பண்புகளாகவும் உருவகப்படுத்தபட்டன.

ஆண், பெண் இரு பாலாரில் ஆண்கள் ஆண்மைப் பண்பைப் பின்பற்றக் கற்பிக்கப்படுகிறார்கள். பெண்கள் பெண்மைப் பண்புகளைப் பின்பற்றக் கற்பிக்கப்படுகிறார்கள். இவ்விரு சாராரும் அந்தந்தப் பாலினப் பண்புகளை உடையவர்களாக இருந்தால் மட்டுமே பிறரால் மதிக்கப்படுகின்றனர். ஆண் நடத்தையைப் பெண்ணும், பெண் நடத்தையை ஆணும் பின்பற்றும்போது அவர்கள் சமூகத்தின் எள்ளலுக்கும் தூற்றலுக்கும் ஆளாகிறார்கள்.

p42.png
p43.png

திருநங்கை என்பது பிறக்கும் போது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்திலிருந்து பாலின அடையாளம் வேறுபடும் நபர்களைக் குறிக்கிறது. 

p44.png

கண்ணுக்குத் தெரியாத கட்டுமானங்கள்

பண்புகளில் மட்டுமல்ல, நடை, உடை, பாவனைகளில் ஆண் வேறு பெண் வேறு என்று சமூகம் கற்பிக்கிறது. ஆணுக்கு வேட்டி, சட்டை, பேண்ட் என்றும், பெண்ணுக்குச் சேலை பாவாடை-தாவணி, சுடிதார்-துப்பட்டா என்றும் வரையறுக்கிறது. நாகரிகம் வளர்ச்சிபெற்றிருக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் உடைகளாகச் சொல்லப்பட்டிருக்கும் பேண்ட் வகைகளை அணிவது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், பெண்ணுக்கான உடைகளை ஆண்கள் அணிய முன்வருவதில்லை. அப்படி அணிந்தால் அவர்கள் பாலின மாறுபாட்டாளர்கள் என்று ஒதுக்கப்படுகிறார்கள்.
 

இவ்வாறு, சமூகம் கண்ணுக்குத் தெரியாத கட்டுமானங்களால் பெண்களைப் பின்னிப் பிணைத்துள்ளது. இத்தகைய செயற்கையான கட்டுமானங்களைப் பெண்கள் புரிந்துகொண்டு அதை விட்டு விலகி, வெளிவர முன்வர வேண்டும். பெண் பிறப்பு குற்றமானதல்ல . பெண்ணின் வளர்ப்பே குற்றமானது. 
 

பாலின சமத்துவம் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் சம உரிமைகள், வாய்ப்புகள் மற்றும் பொறுப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். இது பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், சமூகம் மற்றும் தனிநபர்களின் வாழ்க்கையில் இரு பாலினத்தாரும் சமமாக பங்கேற்கவும், பங்களிக்கவும், பயனடையவும் வழிவகை செய்கிறது

p45.png

Quiz

சினேகிதி மேலும் விபரங்கள்

சினேகிதி ஆண்டறிக்கை

சினேகிதி செய்தி மடல் மற்றும் விபரங்களுக்கு உங்கள் மின் அஞ்சல் அல்லது WhatsApp எண்ணை பதிவு செய்யவும் (இதை நாங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளிக்கிறோம்)

© 2026 SNEHIDHI. All Rights Reserved

bottom of page