
பூப்பெய்தல்

வயதிற்கு வருவது என்றால் என்ன?
பூப்பெய்யும் பொழுது உடளவில் குழந்தை பருவத்திலிருந்து இளம் பருவத்தினறாகின்றனர். உடலில் ஒரு சில மற்றம் உண்டாகும். 8லிருந்து 14வயதிற்குள் பூப்பெய்தல் நிகழும். பொதுவாக ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சீக்கிரம் வயதிற்குவந்து விடுகிறார்கள். பூப்பெய்தல் அதாவது வயதிற்கு வருவது எல்லா பெண்களுக்கும் இயற்கையாக நடக்கும் விஷயம்.
பூப்பெய்தல் பற்றி அறிந்துகொள்ளும் போது குழப்பமாகலாம், மனஅழுத்தம் உருவாகலாம். நம் பெற்றோருடனும் நம் சக வயதுடையோருடனும் மாதாவிடாய் பற்றி பேசவேண்டும். அவர்களும் வயதிற்கு வந்தவர்களே அதனால் அவர்கள் க்குஉங்களை புரிந்து கொள்வார்கள். அதனால் உங்களை எளிதில் புரிந்து கொண்டு உங்களுக்கு அறிவுரை வழங்கலாம்.
தமிழ்நாட்டில் பூப்பெய்தலை பூப்புனித நீராட்டு விழாவாக கொண்டாடுகிறார்கள் இயற்கையாக நடக்கும் மாதவிடாய் பற்றி பேசுவது அசிங்கம் எனக்கூறும் சமுகத்தில் பூப்புனித நீராட்டு விழா கொண்டாடுவது மட்டும் சரியா அது தேவையா என்பதை நீங்கள் யோசித்து தீர்மானியுங்கள்.